Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடற்கரை காந்தி சிலை அருகில் தொடங்கிய பேரணியை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. முன்னதாக கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் நடித்து காட்டிய விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்ற